தமிழகத்தில் இரட்டை ஆட்சிமுறையை புகுத்த ஆளுநர் முயற்சிக்கிறார்..! - அமைச்சர் ஏ.வ.வேலு குற்றச்சாட்டு

பெரியார் முதல் தற்போது உள்ள திமுக அரசு வரை விரும்புவது சமூகநீதி. ஆனால், ஆளுநர் கொண்டுவர முயல்வது மனுதர்மம். தமிழகத்தின் கருத்து, பண்பாடுக்கு எதிராக ஆளுநர் நடந்து வருகிறார் என்று திருப்பூரில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.



கோவை: திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருப்பூர் வடக்கு மாநகர திமுக சார்பில் அண்ணா காலனி பகுதியில் நடைபெற்றது. இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழக அரசு இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனைகளை பட்டியலிட்டார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்களுக்காக திமுக ஆட்சியில் செய்திருப்பதாக அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.



தொடர்ந்து பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, தமிழகத்தில் ஆளுநர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இரட்டை ஆட்சி முறையை தற்போது கொண்டு வர முயற்சிப்பதாகவும், திமுக மற்றும் கலைஞரின் உடன்பிறப்புகள் இருக்கும்வரை அதை அனுமதிக்க மாட்டோம் எனவும் தாய் மொழி தமிழ் மற்றும் வர்த்தகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும்போது இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் ஆளுநர் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகையில் மாணவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரை அழைத்து அவரது கருத்துக்களை திணித்து வருவதாகவும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழகத்தின் கருத்து, பண்பாட்டிற்கு எதிரான கருத்தை திணித்து வருவதாகவும், இதன் காரணமாகவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு முரண்பாடு இருக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில் எந்த ஒரு காரணமும் இல்லை என்று கூறினார்.

பெரியார் முதல் தற்போது உள்ள திமுக அரசு வரை விரும்புவது சமூகநீதி. ஆனால், ஆளுநர் கொண்டுவர முயல்வது மனுதர்மம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பொதுக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திமுக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...