கோவையில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்த ஹோட்டல் உரிமையாளர் - மேயரிடம் வழக்கறிஞர் புகார் மனு!

கோவையில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டுவரும் ஹோட்டலின் உரிமையாளர், பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளை செய்துள்ளதாக மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் அளித்தவர்களை, போலீசார் மற்றும் அரசியல்வாதிகளை வைத்து ஹோட்டல் உரிமையாளர் மிரட்டுவதாக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில், கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர் மாநகராட்சி மேயரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில்‌ வ.உ.சி கிரவுண்ட்‌ அருகில்‌ மாநகராட்சி முதியோர்‌ பூங்காவை ஒட்டி டென்மார்க்‌ என்கிற பெயரில்‌ ஹோட்டல்‌ ஒன்று மாநகராட்சி சொந்தமான கட்டிடத்தில்‌ செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டல்‌ நடந்தும்‌ நபர்‌ பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளை நீண்ட காலமாக செய்துள்ளதாக 21.04.2023 அன்று மாநகராட்சி துணை ஆணையரிடம்‌ புகார்‌ அளித்தேன்‌. அந்தப்‌ புகார்‌ மனுவானது மேல்‌ நடவடிக்கைக்காக மத்திய மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, ஹோட்டல்‌ நடத்தும்‌ நபர் போலீசை வைத்தும்‌ அரசியல்வாதிகளை வைத்தும்‌ எங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது விதமாக செயல்பட்டு வருகிறார். இதற்கு முக்கிய காரணம் மத்திய மண்டல அலுவலத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர்தான் காரணம்.

மக்கள்‌ வரிப்பணத்தில்‌ சம்பளம்‌ வாங்கிக்‌ கொண்டு நடுநிலையாக செயல்பட வேண்டிய அதிகாரி, ஒருதலை பட்சமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால்,‌ அதிகாரி மீது துறைரீதியாக கடும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி மீண்டும்‌ ஆக்கிரமிப்பு செய்யாத அளவுக்கு நடவடிக்கை எடுக்குமாறும்‌, மாநகராட்சி எந்த அளவுக்கு வாடகைக்கு விட்டுள்ளதோ, அந்த இடத்தை மட்டும்‌ அந்த நபர்‌ பயன்படுத்தும்‌ விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...