மாநகராட்சி இடத்தில் உள்ள சீமை கருவேள மரங்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் உத்தரவு


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 19-வது வார்டுக்குட்பட்ட வீரகேரளம் பெரிய தோட்டம் காலனி மனைப்பிரிவு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த இடத்தில் உள்ள சீமைக் கருவேள மரங்களை அகற்றி அறிவிப்பு பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.



இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் வீடு வீடாகச் செல்லும் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்களின் பதிவேடு புத்தகங்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர், தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டார்.



பின், வீரகேரளம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவை நேரில் சென்று மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டார். தொடர்ந்து, வீரகேரளம் ஹவுசிங்யூனிட் பகுதியில் உள்ள குடிநீர் நீத்தேக்கத் தொட்டியைச் சுற்றி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, வடவள்ளி 17-வது வார்டுக்குட்பட்ட குருசாமி நகர் பகுதியில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, உதவி ஆணையர் கே.ராமைய்யா, செயற்பொறியாளர் (பொ) சரவணக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...