பிளஸ் 2 பொதுத் தேர்வில் கோவையில் 339 பள்ளிகள் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி - ஆசிரியர்கள் பெருமிதம்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 363 பள்ளிகளில் 339 பள்ளிகள் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சியை பெற்றுள்ளது. மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளித்ததற்கு, கை மேல் பலன் கிடைத்துள்ளதாக, ஆசிரியர்கள் பெருமிதம்.


கோவை: கோவை மாவட்டத்தில் 339 பள்ளிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் சமீபத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதினர். இதில், 339 பள்ளிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு பின் முழுமையாக பள்ளிகளை இயக்கி நடத்தப்பட்ட முதல் தேர்வு என்பதால் பிளஸ்-2 தேர்வு முடிவில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதில், ஆப்சென்ட் பட்டியல் நீண்டதோடு முக்கிய பாடங்களில், கடின வகை கேள்விகளே அதிகம் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.

அரசுப்பள்ளி மாணவர்களின் வருகை பதிவும் குறைந்ததால், தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுமோ என்ற கருத்தும் எழுந்தது. ஆனால் தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு சாதகமாகவே இருந்ததோடு, தேர்ச்சி சதவீதமும் அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியதில் 97.57 சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்றது. மாநில அளவில் 4-ம் ரேங்க் பட்டியலில் இருந்தாலும், 0.28 சதவீதத்தில் தான், முதலிடத்தை தவற விட்டது.

ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் இப்படியிருக்க, 90 சதவீதத்திற்கும் மேல், தேர்ச்சி அடைந்த பள்ளிகள் மட்டுமே 339 என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 89-80 சதவீத தேர்ச்சியை 21 பள்ளிகளும், 79 சதவீத தேர்ச்சியை வெறும் மூன்று பள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன.

இதன்மூலம், மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளித்ததற்கு, கை மேல் பலன் கிடைத்ததாக, ஆசிரியர்கள் பெருமிதத்துடன் கூறியுள்ளனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், கோவை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கும் இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள் அனுப்பி நடத்தப்பட்டது.

இதில் கேள்விகள் சிந்தித்து எழுதும் படியாக இருந்தது. பொது வினாத்தாள் முறையில் பதிலளிக்க, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இது பொதுத் தேர்வு முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளில் வினாத்தாளை பிரிண்ட் அவுட் எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்த்தால் இத்திட்டம் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...