கோவையில் டிஐஇ சார்பில் மகளிருக்கான தொழில்முனைவோர் ஏர்ஸ்வீ பயிற்சிப் பட்டறை


வாரங்காலில் நடைபெற்ற முதலாவது பயிற்சி பட்டறையின் வெற்றியைத் தொடர்ந்து, டிஐஇ குளோபல் கோவையில் நான்கு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. அகில இந்திய அளவில் தொழில் முனைவோரை உருவாக்கி, மகளிர் பொருளாதாரத்தை உயர்த்துதல் என்ற இந்த பயிற்சி பட்டறைக்கு தேவையான உதவிகளை இந்தியாவில் உள்ள அமெரிக்கா மிஷன் ஏற்பாடு செய்திருந்தது.

கோவை ரேஸ்கோர்ஸ்-யில் உள்ள தாஸ் சுர்யா விவாந்தாவில் நேற்று நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் ஏர்ஸ்வீ திட்டத்தின் தலைவி சீமா சதுர்வேதி பங்கேற்று பேசுகையில், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள இளம் பெண்களின் முன்னேற்றம் தான் எங்களது நோக்கம். வாய்ப்புள்ள பெண்களுக்கு தொழில் வாய்ப்பு அளிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 



ஏர்ஸ்வீ திட்டமானது அவர்களது நிலையை உயர்த்தி பிரச்சனைகளை சமாளித்து வாய்ப்புகளை பயன்படுத்தி, வெற்றிகரமான தொழில் முனைவோருக்கான தீர்வுகளை அளிப்பதாகும்" என்றார்.

இந்திய ஆலோசக ஹேமலதா அண்ணாமலை பேசுகையில், இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்க கிடைத்ததையடுத்து 150 பேர் பல்வேறு போட்டிகளுக்கு இடையே தேர்வு செய்யப்பட்டனர்.



தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சமுதாய பொருளாதார பின்னணியை உடையவர்கள். இவர்களது தொழில் முனைவோர் வெற்றியை காண விரும்புகிறோம்" என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் கலாச்சார பிரிவு கவுன்சிலர் டாக்டர் க்ரேக் எல்.டிக்கர் இப்பயிற்சி பட்டறையில் பங்கேற்று பேசுகையில், தொழில் முனைப்பில் பெண்களின் பங்கு அவசியமானது. சிறந்த துவக்க நிலைக்கு தேவையானது, மிக முக்கியமானது.

இந்தியாவில் ஒரு நட்பு ரீதியான தொழில்முனைப்பு சூழலை உருவாக்க இந்த ஒரு வார கால பயிற்சி பட்டறை ஒரு முன் உதாரணமாக அமையும். டிஐஇ குளோபல் மற்றும் டிஐஇ கோவை இணைந்து கோவையில் இந்த பயிற்சி பணிமனையை நடத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...