தமிழகத்திற்கு ஜவுளிப்பூங்கா அறிவிப்புக்கு முதல்வரின் முயற்சியே காரணம்..! - அமைச்சர் காந்தி தகவல்

இந்தியாவில் ஜவுளித்துறையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஜவுளி பூங்கா 5 பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முதல்வரின் முயற்சியால் தமிழகத்திற்கும் ஜவுளி பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காந்தி தெரிவித்தார்.


கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கைத்தறி மற்றும் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் கலந்துகொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் காந்தி பேசியதாவது:

கைத்தறி முன்னேற்றத்திற்கு கடந்த 1.5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் வழங்கியும், நெசவாளர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி மற்றும் கோ- ஆப்டெக்ஸ் விற்பனையகங்களை நவீனமயமாக்கி வருகிறோம். பெங்களூரு நிறுவனம் மூலம் 500 புதிய வடிவமைப்புகளை தற்போது உருவாக்கியுள்ளோம்.

திமுக ஆட்சி பொறுப்பேற்கும்போது கைத்தறித்துறையில் ரூ.9 கோடி அளவிற்கு நஷ்டத்தில் இருந்தது. தற்போது, சுமார் ரூ.20 கோடி விற்பனையை கைத்தறித்துறை செய்து வருகிறது. அதில், ரூ.10 கோடிக்கு விற்பனையகங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் உடைகள் மற்றும் நெசவாளர்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

நாளை முதல் முறையாக ஊட்டியில் தோடா மக்களுக்கான கூட்டுறவு சொசைட்டி துவங்க உள்ளோம். அதன்மூலம் அவர்களது தயாரிப்புகளையும் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய உள்ளோம்.

நெசவாளர்கள் குடும்பத்துடன் சிரமங்களிடையே நெசவு செய்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்குபின் கடந்த ஆண்டு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் 10 சதவீத உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

12 தேசிய பஞ்சாலைகளில் தற்போது 6 தான் உள்ளது. இந்தியாவில் தமிழகம் ஜவுளித்துறையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஜவுளி பூங்கா 5 பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முதல்வரின் முயற்சியால் தமிழகத்திற்கும் ஜவுளி பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், தேசிய பஞ்சாலை விவகாரம் குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்ட கொள்கை முடிவு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...