ஆடியோ விவகாரம் தொடர்பாக என் மீது முதல்வர் வழக்கு போட்டால் சந்திப்பேன்..! - அண்ணாமலை பேட்டி

பிடிஆர் ஆடியோ விவகாரத்திற்காக மாற்றப்பட்டிருந்தால் அதை ஏற்க முடியாது. அது அவருடைய தவறல்ல. இப்போதும் நான் சவால் விடுகிறேன். அந்த ஆடியோவில் நான் முதல்வரையும்தான் குற்றம்சாட்டியுள்ளேன். இதற்கும் என் மீது வழக்கு போட்டால் சந்திப்பேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அமைச்சர் நாசர் மீது ஏற்கெனவே நாங்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறோம். அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதற்கு பாராட்டுகள். புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் பால் கொள்முதல் விலையை உயர்த்தியும் ஆவின் பால் விலையை குறைத்தும் வழங்க வேண்டும். அதற்கு சிறப்பான நிர்வாக அனுபவம் தேவை.

தொழில் துறை பொறுப்பை டிஆர்பி ராஜாவுக்கு வழங்கியிருக்கிறார்கள். அது ஏன் என தெரியவில்லை. அந்த குடும்பம்தான் 20 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்த துறையை வழங்கியுள்ளார்கள்.

என்ன ஐடியாவில் இதை வழங்கி இருக்கிறார்கள் என தெரியவில்லை. டி.ஆர்.பாலு தனது நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டது, நாடாளுமன்ற அவை குறிப்பிலேயே இடம் பெற்றுள்ளது.

டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாக அறிகிறேன். இதனால் நான் பயந்துவிடப் போவதில்லை. இன்னும் உங்கள் மீதான குற்றச்சாட்டு அதிகமாகுமே தவிர குறையாது.

நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மிக சிறப்பாக செயல்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது மேடைகளிலேயே பாராட்டி இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவரிடம் இருந்து நிதித்துறையை மாற்றுவதற்கு என்ன காரணம்?

பிடிஆர் ஆடியோ விவகாரத்திற்காக மாற்றப்பட்டிருந்தால் அதை ஏற்க முடியாது. அது அவருடைய தவறல்ல. இப்போதும் நான் சவால் விடுகிறேன். அந்த ஆடியோவில் நான் முதல்வரையும்தான் குற்றம்சாட்டியுள்ளேன்.

இதற்கும் என் மீது வழக்கு போட்டால் சந்திப்பேன். கோர்ட்டே அந்த ஆடியோவை ஆய்வு செய்யட்டும். தவறு செய்தவர்களை பேசியதால் பிடிஆரை பகடைக்காயாக்கக் கூடாது. அன்று கருணாநிதி பாஜக எங்கே இருக்கிறது என கேட்டிருந்தார். இன்று 1461 கோடி கேட்கும் அளவுக்கு நாங்கள் வளர்ந்திருக்கிறோம்.

உங்களை கேள்வி கேட்கும் அளவுக்கு நாங்கள் வளர்ந்திருக்கிறோம். திமுகவின் 2ஆவது ஊழல் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஏற்கெனவே வெளியிட்ட பட்டியலில் 11 பேர் பெயர் இடம்பெற்றிருந்தது. தற்போது வெளியாகும் பட்டியலில் புதிய அமைச்சர் உள்பட 21 பேர் பட்டியல் இருக்கும்.

இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...