ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.


கோவை:

இந்திய ரயில்வே துறையில் பணியாளர்கள் குறைக்கப்படுவதை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அண்மையில் ரயில்வே வாரியம், 14.8 லட்சம் பணியிடங்களில் சுமார் 2 சதவீதத்தை இந்த ஆண்டில் குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரயில் சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், பணியாளர்கள் குறைப்பு பாதுகாப்பு மற்றும் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த முடிவிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, ரயில்வே துறையில் ஏற்கனவே 30,000 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், சமீபத்தில் அவை நிரப்பப்படாமல் ஆட்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

காலியான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது விபத்துகளுக்கு காரணமாக அமைந்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், இப்படிப்பட்ட சூழலில் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது ரயில்வே துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் கூறினார். ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதால் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் அளித்த வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், பொதுத்துறையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...