பல்லடம் அருகே கனிம வளங்கள் கொள்ளை - லாரிகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்!

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் அதிகளவில் கனிம வளங்கள் கொள்ளை போவதாக தொடர்ந்து கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கனிம வளங்கள் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே கிராம மக்கள் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கம்பாளையம், ராசா கவுண்டம்பாளையம்,காளிவேலம்பட்டி, ஊஞ்சபாளையம், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.



இந்த கல்குவாரிகளிலிருந்து கேரளாவிற்கு சாலை அமைக்கும் பணிக்காக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கனரக வாகனங்கள் மூலம் எம்சான்ட், ஜல்லி போன்ற பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.



50 டன் அளவில் அதிக அளவில் எம் சாண்ட் ஜல்லி போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு கிராம சாலைகள் வழியாக செல்வதால் ஊர் மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதாகவும்,

அதிகப்படியான கனிமவள கொள்ளை நடைபெறுவதாகவும், இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகம் வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராம சபை கூட்டத்திலும் கனிம வள கொல்லையில் ஈடுபடும் கேரள வாகனங்களை ஊருக்குள் அனுமதிக்க கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி கேரள வாகனங்கள் மீண்டும் இயக்கப்பட்டதை கண்டித்து சுக்கம்பாளையம் வழியாக வந்த கேரளா வாகனங்களை தடுத்து நிறுத்தி சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...