கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு - பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியீடு!

கோவையில் சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த செயின் பறிப்பு சம்பவம் நடந்தது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை இராமநாதபுரம், ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரோஜவிபி.

அவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றுவிட்டு, மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது, பின்னால் வந்த இரண்டு நபர்கள் திடீரென சரோஜாவிபி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

சுதாரித்துகொண்ட சரோஜாவிபி, தனது தங்க சங்கிலியை இருக்கமாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்ட நிலையில், சங்கிலி அறுந்து பாதி கொள்ளையர்களின் கையில் கிடைத்ததால் அங்கிருந்து கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இதனால் செய்வதவறியாது தவித்த சரோஜாவிபி, தனது கையில் இருந்த பாதி தங்க சங்கிலியுடன் கோவை இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதோடு, அந்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...