கிணத்துக்கடவு அருகே தடுப்பணையில் மூழ்கிய கல்லூரி மாணவன் உடல் மீட்பு!

கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்த தஞ்சை ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற கல்லூரி மாணவர் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவரது உடல் பத்திரமாக மீட்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே தனியார் கல்லூரி மாணவர் நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் கார்த்திகேயன் (22). இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் படித்து வந்தார். அதே கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது கல்லூரி விடுதியில் இருந்து முடி வெட்டுவதற்காக கிணத்துக்கடவிற்கு சென்றபோது அவரது கல்லூரி நண்பர்கள் ஜீவானந்தம், மாதவன், ஹரி,இளங்கோ உள்ளிட்ட 8 பேருடன் கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதூரில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றதாக தெரிகிறது.

தடுப்பணையில் அனைவரும் குளித்துவிட்டு திரும்பும்போது கார்த்திகேயன் மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர் வந்து தடுப்பனையில் கார்த்திகேயன் உடலை தேடினர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு தடுப்பணை தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இறந்து போன கல்லூரி மாணவன் உடலில் காயம் இருந்ததால் மாணவன் கார்த்திகேயனின் தந்தை திருப்பதி தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனுடன் குளிக்க சென்ற மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...