கோவையில் தனியார் நிறுவன இயக்குநர் வீட்டில் தங்க கட்டி திருட்டு - பெண் கைது!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், மயில் மார்க் சம்பா ரவை நிறுவன இயக்குனர் பொன் முருகன்(46) என்பவரது வீட்டில் இருந்த 150 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை திருடிச் சென்ற பணிப்பெண் ஜோதி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: கோவையில் தங்க கட்டிகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அடுத்த சிரியன் சர்ச் சாலை பகுதியை சேர்ந்தவர் பொன் முருகன் (46).

இவர் பிரபல மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார். இவரது வீட்டில் வைத்திருந்த சுமார் 150 கிராம் தங்க பிஸ்கட், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளது.

இதையடுத்து பொன்முருகன் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார்.

அப்போது அவரது வீட்டு வேலைக்கு இருந்த ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி (47) என்பவர் தங்கக் கட்டியை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பொன்முருகன் ஆர்.எஸ் புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோதியை கைது செய்து அவரிடமிருந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஜோதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...