திருப்பூரில் காவல்துறைக்கு புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் - மாவட்ட எஸ்.பி சசாங் சாய் துவங்கி வைத்தார்!

திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக புதிதாக இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எஸ்.பி சசாங் சாய் கலந்து கொண்டு இருசக்கர வாகனங்களை பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் காவல்துறையினருக்கான புதிய இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினருக்கு புதிய ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விரைவாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் செல்லும் வகையில் இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளான அவிநாசி, ஊத்துக்குளி, ஊதியூர் உள்ளிட்ட 12 காவல் நிலையங்களுக்கான புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த புதிய ரோந்து இருசக்கர வாகனங்களில் அதிக ஒளி எழுப்பக்கூடிய நவீன இயந்திரங்கள் மற்றும் ஸ்பீக்கர், மைக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...