கரூர் - பல்லடம் இடையே செல்லும் பேருந்தில் ஜூஸ் கொடுத்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயற்சி!

கரூரில் இருந்து பல்லடம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் நோக்கில் மர்ம நபர் ஒருவர் கொடுத்த ஜூசை குடித்த இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: கரூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த அரசு பேருந்தில் ஜூஸ் கொடுத்து பிக்பாக்கெட் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே வேலப்பம்பாளையத்தை சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்மணி இன்று தனது எட்டு வயது மகன் சர்வேஷ் மற்றும் 7 வயது மகன் மித்ரன் ஆகியோருடன் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கோவை செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ரேஷ்மாவிடம் வெயிலுக்கு ஜூஸ் குடிக்குமாறு கொடுத்துள்ளார். ரேஷ்மாவும் ஜூசை குடிக்காமல் தனது இரண்டு குழந்தைகளுக்கு அதனை கொடுத்துள்ளார்.



இந்நிலையில், ஜூசை குடித்த சிறிது நேரத்திலேயே பேருந்து பல்லடம் அருகே வந்தபோது சர்வேஷ் மற்றும் மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர். அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவைத்து இரண்டு குழந்தைகளையும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



2 குழந்தைகளுக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு மர்ம நபர் கொடுத்த ஜூசை குழந்தைகளுக்கு கொடுத்ததால் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...