கோவையில் தூய்மை பணியாளர்களுக்கான கண் மருத்துவ முகாம் - மாநகராட்சி ஆணையர் பிரதாப் துவங்கி வைத்தார்!

கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ சங்கரா கண்‌ மருத்துவமனை இணைந்து நடத்திய மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான கண்‌ மருத்துவ சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையர் பிரதாப் துவங்கி வைத்தார்.


கோவை: கோவையில் மாநகராட்சி சார்பில் நடைபெறும் கண்‌ மருத்துவ சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ துவக்கி வைத்தார்‌.

கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ சங்கரா கண்‌ மருத்துவமனை இணைந்து கண்‌ மருத்துவ சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பேசியதாவது, கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ சங்கரா கண்‌ மருத்துவமனை இணைந்து கோவை‌ வடக்கு மண்டல அலுவலக வளாகத்தில்‌ கோவை‌ மாநகராட்சியில்‌ பணிபுரிந்து வரும்‌ தூய்மை பணியாளர்களுக்கு வெளிச்சம்‌ திட்டத்தின் கீழ்‌ கட்டணமில்லா சிறப்பு கண்‌ சிகிச்சை மருத்துவ முகாம்‌ தொடங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில்‌ பணிபுரிந்து வரும்‌ 2,279 நிரந்தர தூய்மை பணியாளா்‌ மற்றும்‌ 4,097 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்‌, 623 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌, 494 ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ கிளீனர்கள் என‌ ஆகமொத்தம்‌ 7493 மாநகராட்சி பணியாளா்களுக்கு அவர்களின்‌ உடல்நலத்தை கருத்தில்‌ கொண்டு கட்டணமில்லா சிறப்பு கண்‌ சிகிச்சை மருத்துவ முகாம்‌ இன்று முதல்‌ நடத்தப்படுகிறது.



சங்கரா கண்‌ மருத்துவமனையை சார்ந்த 10 பேர்‌ கொண்ட மருத்துவக்குழு இப்பணியில்‌ ஈடுபட்டு வருகிறார்கள்‌. பார்வை பரிசோதனை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்‌ கண்ணாடியும்‌, அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை, தொடா்‌ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தொடா்‌ சிகிச்சையும்‌ இந்த கட்டணமில்லா சிறப்பு கண்‌ முகாமில்‌ வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக இன்று நடத்தப்படும்‌ மருத்துவ முகாமில்‌ 150 முதல்‌ 200 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. வடக்கு மண்டலத்தில்‌ பணியாற்றும்‌ சுமார்‌ 900 நபர்கள்‌ இந்த முகாமில்‌ பயன்பெறுவார்கள்‌. இத்திட்டத்திற்கு வெளிச்சம்‌ என பெயரிடப்பட்டுள்ளது.

அனைவரும்‌ இந்த கண்‌ சிகிச்சை மருத்து முகாமினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. மாநகராட்சி முழுவதும்‌ உள்ள 100 வார்டுகளிலும்‌ வெளிச்சம்‌ திட்டம்‌ படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.‌ இதன் மூலம் சுமார்‌ 8,000 நபர்கள்‌ பயன்பெறுவார்கள்‌.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...