கோவையில் என்ஐஏ-வை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களான முகமது அப்பாஸ் மற்றும் யூசஃப் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மதுரை வழக்கறிஞர்களை கைது செய்த என்ஐஏ-வை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்களான முகமது அப்பாஸ் மற்றும் யூசஃப் ஆகிய இருவரும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்காக ஆஜராகி நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவர்கள் இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். என்ஐஏ-வின் இச்செயலுக்கு பல்வேறு வழக்கறிஞர், வழக்கறிஞர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் என்ஐஏ-வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு இச்செயலை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



வழக்கறிஞர்கள் வழக்காடுவது என்பது அவர்களின் தொழில் கடமை, தொழில்முறை என தெரித்த அவர்கள், வழக்கறிஞர்களை கைது செய்வது என்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

இதில் வழக்கறிஞர்கள் ஜோதி, பாலமுருகன், ராதாகிருஷ்ணன், வெண்மணி, டயானா, தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...