கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மொத்தம் ரூ.62.80 லட்சம் மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேயர் தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண.3க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணியினையும்,

சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகர் பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.47.80 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள், உணவுக்கூடம், கூடுதல் கழிவறைகள் உள்ளிட்ட கட்டுமானப்பணியினையும், ஆக மொத்தம் ரூ.62.80 இலட்சம் மதிப்பீட்டிலான கட்டுமானப்பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடாந்து, சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகர் பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் பழுதடைந்த வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை உடனடியாக புனரமைத்து மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்ட பின்னா்,

அப்பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையில் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உணவுப்பொருட்கள் விநியோகம் குறித்தும், இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, வடக்கு மண்டலத்தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் கவிதா, உதவி ஆணையர் மோகன சுந்தரி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் உத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண.3க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணியினையும்,
சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகர் பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.47.80 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள், உணவுக்கூடம், கூடுதல் கழிவறைகள் உள்ளிட்ட கட்டுமானப்பணியினையும், ஆக மொத்தம் ரூ.62.80 இலட்சம் மதிப்பீட்டிலான கட்டுமானப்பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடாந்து, சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகர் பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் பழுதடைந்த வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை உடனடியாக புனரமைத்து மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்ட பின்னா்,
அப்பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையில் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உணவுப்பொருட்கள் விநியோகம் குறித்தும், இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, வடக்கு மண்டலத்தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் கவிதா, உதவி ஆணையர் மோகன சுந்தரி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் உத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.