கோவை வடக்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த மேயர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ மொத்தம்‌ ரூ.62.80 லட்சம்‌ மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேயர் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண.3க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.15 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அங்கன்வாடி மையம்‌ கட்டுமானப்பணியினையும்‌,



சின்னவேடம்பட்டி, அஞ்சுகம்‌ நகர்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.47.80 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 3 வகுப்பறைகள்‌, உணவுக்கூடம்‌, கூடுதல்‌ கழிவறைகள்‌ உள்ளிட்ட கட்டுமானப்பணியினையும்‌, ஆக மொத்தம்‌ ரூ.62.80 இலட்சம்‌ மதிப்பீட்டிலான கட்டுமானப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமி பூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்‌.



அதனைத்தொடாந்து, சின்னவேடம்பட்டி, அஞ்சுகம்‌ நகர்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்‌ பழுதடைந்த வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகளை உடனடியாக புனரமைத்து மாணவர்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்ட பின்னா்‌,



அப்பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையில்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உணவுப்பொருட்கள்‌ விநியோகம்‌ குறித்தும்‌, இருப்பு குறித்தும்‌ கேட்டறிந்தார்‌.

இந்நிகழ்ச்சியின்போது, வடக்கு மண்டலத்தலைவர்‌ கதிர்வேல்‌, மாமன்ற உறுப்பினர்‌ கவிதா, உதவி ஆணையர்‌ மோகன சுந்தரி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌, உதவி பொறியாளர்‌ உத்தமன்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...