கோவை வடக்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த மேயர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ மொத்தம்‌ ரூ.62.80 லட்சம்‌ மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேயர் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண.3க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.15 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அங்கன்வாடி மையம்‌ கட்டுமானப்பணியினையும்‌,



சின்னவேடம்பட்டி, அஞ்சுகம்‌ நகர்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.47.80 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 3 வகுப்பறைகள்‌, உணவுக்கூடம்‌, கூடுதல்‌ கழிவறைகள்‌ உள்ளிட்ட கட்டுமானப்பணியினையும்‌, ஆக மொத்தம்‌ ரூ.62.80 இலட்சம்‌ மதிப்பீட்டிலான கட்டுமானப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமி பூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்‌.



அதனைத்தொடாந்து, சின்னவேடம்பட்டி, அஞ்சுகம்‌ நகர்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்‌ பழுதடைந்த வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகளை உடனடியாக புனரமைத்து மாணவர்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்ட பின்னா்‌,



அப்பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையில்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உணவுப்பொருட்கள்‌ விநியோகம்‌ குறித்தும்‌, இருப்பு குறித்தும்‌ கேட்டறிந்தார்‌.

இந்நிகழ்ச்சியின்போது, வடக்கு மண்டலத்தலைவர்‌ கதிர்வேல்‌, மாமன்ற உறுப்பினர்‌ கவிதா, உதவி ஆணையர்‌ மோகன சுந்தரி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌, உதவி பொறியாளர்‌ உத்தமன்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...