கோவையில் நடைபயிற்சி மேற்கொண்ட தலைமை ஆசிரியரின் 6.5 சவரன் நகை பறிப்பு!

கோவை சரவணம்பட்டி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உஷாராணி (55) என்பவரது கழுத்தில் இருந்த 6.5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற நிலையில், போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் 6.5 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜு என்பவரது மனைவி உஷாராணி (55). இவர் அரசு பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உஷாராணி நேற்று மாலை வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது சரவணம்பட்டி ஜனதா நகர் - சிவசக்தி நகர் இடையே செல்லும் மேம்பாலம் அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் உஷாராணியின் கழுத்தில் அணிந்திருந்த 6.5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த உஷாராணி, லேசான காயமடைந்தார். இது குறித்து உஷாராணி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமை ஆசிரியரின் செயினை பறித்துக் கொண்டு சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...