ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, இந்தத் திட்டம் நெசவாளர்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பை உருவாக்கும் என தெரிவித்துள்ளது.


சென்னை: 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டதற்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணையின்படி, ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்களுக்கு 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்பு, புதிய வண்ணம் மற்றும் தங்க, வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், சலவை செய்யப்பட்ட உயர்தரத்தில் புதிய வடிவமைப்புடன் 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த ₹642 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு முதற்கட்டமாக ₹300 கோடி முன்பணமாக ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட வழிவகை செய்த கைத்தறித் துறை அமைச்சர், துறை உயர் அதிகாரிகள் மற்றும் நெசவாளர்களின் நலனை முன்னிறுத்தி உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு, பொங்கல் இலவச வேட்டி-சேலை திட்டத்தை தரமான முறையில் செயல்படுத்தவும் உதவும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...