கோவையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!

கோவை சாந்திமேடு அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கிழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை என்பதால், இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகியுள்ளர். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து ஒராண்டாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானதாக தெரிகிறது. இதனையறிந்த ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...