பல்லடத்தில் உலா வரும் டவுசர் கொள்ளையர்களை பிடிக்க கோரி டி.எஸ்.பி-யிடம் பொதுமக்கள் மனு!

கொசவம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் டவுசர் மட்டும் அணிந்த மூவர் தங்கள் உடலில் கிரீஸ் பூசிக்கொண்டு வீடுகளை நோட்டமிட்டவாறு உலா வந்த சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை பிடிக்கக்கோரி அப்பகுதி மக்கள் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடத்தில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் டவுசர் கொள்ளையர்களை பிடிக்க கோரி கொசவம்பாளையம் பகுதி மக்கள் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.



கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பல்லடம் அருகே கொசவம்பாளையம் சாலை, டி.எம்.எஸ். கார்டன், சின்னையா கார்டன் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் உடல் முழுவதும் கிரீஸ் பூசிக்கொண்டு ட்ரவுசர் மட்டும் அணிந்து கொண்டு மூன்று கொள்ளையர்கள் ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டபடி உலா வந்துள்ளனர்.



இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பல்லடம் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி டவுசர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.



இந்நிலையில் கொசவம்பாளையம் சாலை, டி.எம்.எஸ். கார்டன், சின்னையா கார்டன் ஆகிய பகுதி மக்கள் இன்று பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியாவை, நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் எங்கள் பகுதியில் இரவு நேரங்களில் உடலில் வழவழப்பான திரவத்தை தடவிக் கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நோக்கில் உலாவரும் டவுசர் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது அதிர்ச்சியாகவும், உயிருக்கு அச்சுறுத்தும் விதமாகவும் உள்ளது,

இதே பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு டவுசர் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டனர். தற்போது கொலை, கொள்ளை முயற்சிகளை தடுக்கவும், வீட்டில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் தனியாக இருப்பதால் அவர்களுக்கு பாதுகாக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். துரித நடவடிக்கை மேற்கொண்டு டவுசர் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

அப்போது அவர்களிடம், ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், விரைவில் டவுசர் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் எனவும் கோடை காலம் என்பதால் வெளியூருக்கு செல்லும்போது காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு டி.எஸ்.பி சௌமியா பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

பல்லடம் பகுதி மக்களிடையே பீதியை கிளப்பும் வகையில் இரவில் பயங்கர ஆயுதங்களுடன் உலா வரும் டவுசர் கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...