வால்பாறையில் பெண் சிறுத்தை உயிரிழப்பு - 2 சிறுத்தைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்திருக்கலாம் என தகவல்!

வால்பாறை அடுத்த சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். அதில், சிறுத்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: வால்பாறை அருகே சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், சிறுத்தை உயிரிழந்ததை உறுதி செய்தனர்.



பின்னர், ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் பார்கவேதேஜா உத்தரவின் பேரில், வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் உதவி வன பாதுகாவலர் செல்வம், மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், சேக்கல்முடி எஸ்டேட் மேலாளர் துருபாக்யோதி ஆகியோர் முன்னிலையில் சிறுத்தையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது.



பின்னர் ஆய்வக பரிசோதனைக்காக உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.



முடிவில் சிறுத்தையின் உடல் தீயிட்டு சம்பலாகும் வரை எரியூட்டப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுத்தை சுமார் 6 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை எனவும், மற்ற சிறுத்தைகளுடன் சண்டையிட்டு இருந்திருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...