கோவையில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற நபர் கைது - போலீசார் விசாரணை!

கோவை - பாலக்காடு சாலையில் உள்ள சுகுணாபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற நபரை குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை தலைவராக காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் இன்று காலை 5 மணிக்கு கோவை - பாலக்காடு சாலையில் சுகுணாபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, அவ்வழியாக வந்த TN 09 D 0909 என்ற பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தலா 25 கிலோ எடை கொண்ட 20 வெள்ளை நிற மூட்டைகள் என மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.



இதனையடுத்து வாகன உரிமையாளரான கோவை தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்த அஜ்மல் (19) என்பவரை கைது செய்து விசாரணை செய்தபோது இவர் உக்கடம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் உள்ள கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை போலீசார் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...