பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வரை டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்ற வேண்டும் - இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் மனு!

தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளித்து தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வரை டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இந்து மக்கள் கட்சி தமிழகம் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் வி.வி.மாணிக்கம் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியில் பிரதான கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்.



கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திட வேண்டும். மேலும் தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளித்தும் தமிழக அரசே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்திட வேண்டும்.



இதனிடையே மனு அளிக்க வந்தவர்கள் மண்பானை மற்றும் பனை ஓலைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்தனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...