கோவை கிழக்கு மண்டலத்தில் தார்ச் சாலை, பள்ளி கட்டிட புனரமைப்பு பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு!

கோ‌வை கிழக்கு மண்டலத்தில்‌ தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.88 லட்சம்‌ மதிப்பிட்டில்‌ நடைபெற்று வரும்‌ தார்‌ சாலை பணி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.



கோவை: கோவை கிழக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி புனரமைப்பு பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை‌ மாநகராட்சி, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.6க்குட்பட்ட வீரியம்பாளையம்‌ முதல்‌ அன்னை பிள்ளையார்‌ கோவில்‌ வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.88 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.300 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவது குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



இதேபோல், நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ ரூ.20 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிகள்‌ மற்றும்‌



கருப்பராயம் பாளையம்‌ மாநகராட்சி நடுநிலை பள்ளியில்‌ ரூ.28 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிகளையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் நேரு நகா்‌ மாநகராட்சி பள்ளியில்‌ பழுதடைந்த கழிவறைகளை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும்‌, கட்டுமான‌ பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளாருக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்தொடர்ந்து, வீரியம்பாளையம்‌ பகுதியில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் கல்பனா, அப்பகுதியில்‌ தார்‌ சாலை மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைக்க உரிய திட்ட மதிப்பிடு தயாரிக்க பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...