மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கோவையில் பல்வேறு அமைப்பினர் போராட்டம்!

டெல்லியில் நீதி கேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், அவர்களை தாக்கி கைது செய்த டெல்லி போலீசாரை கண்டித்தும், கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு SFI, DYFI, அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், அவர்களை தாக்கிய டெல்லி காவல்துறையை கண்டித்தும் கோவையில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பல நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி திரளாகச் சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக எம்பி மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது குறித்து பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை கைது செய்த டெல்லி காவல் துறையை கண்டித்தும் பாஜக எம்பி யை கைது செய்ய வலியுறுத்தியும் கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் SFI, DYFI, அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக பாஜக எம் பி யை கைது செய்ய வேண்டும் எனவும் அவரிடம் உரிய விசாரணை மேற்கொள்ள பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...