அவிநாசி அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நாதம்பாளையம் ரேஷன் கடை, முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியராக சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த கிறிஸ்துராஜ் கடந்த வாரம் பதவி ஏற்றுக்கொண்டார்.



இந்நிலையில், இன்று அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 



இதேபோல், நாதம்பாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடை, முதலிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். 



அப்போது பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் வகுப்பறைகள் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார். 



மேலும் பொது மக்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...