கோவையில் அனுமதியற்ற 185 விளம்பர பலகைகள் அகற்றம்!

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 185 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக, சமீபத்தில் கருமத்தம்பட்டியில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல்.



கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 185 அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பு, காவல்துறையினர் இணைந்து அகற்ற தனிக்குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், தெக்கலூர் அடுத்த நீலாம்பூர் சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற காவல்துறையினர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே கருமத்தம்பட்டி அருகே இரும்பு கம்பம் சரிந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும், நில உரிமையாளர் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கும் பட்சத்தில் நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தினர் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...