அரசு பேருந்தில் பேராசிரியையிடம் தங்க நாணயத்தை திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை குனியமுத்தூர் வழியாக செல்லும் அரசு பேருந்தில் பயணித்த தமிழ்ச்செல்வி என்ற பேராசிரியையின் பையில் இருந்த ஒரு சவரன் தங்க நாணயத்தை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத பெண் பயணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சுகுணாபுரம் அருகே அரசு பேருந்தில் தனியார் கல்லூரி பேராசிரியையின் பையில் இருந்த ஒரு சவரன் தங்க நாணயத்தை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கோவை மாவட்டம் மதுக்கரையை சேர்ந்த மாரப்பன் என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி (57). இவர் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டவுன்ஹால் சென்ற தமிழ்ச்செல்வி ஒரு சவரன் தங்க நாணயத்தை வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் காந்திபுரத்தில் இருந்து மதுக்கரை செல்ல அரசு பேருந்தில் ஏறி வந்துள்ளார். அப்போது சுகுணாபுரம் மைல் கல் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அவரது கைப்பை பேருந்தில் விழுந்ததாக தெரிகிறது. 

அப்போது அந்தப் பையில் இருந்த ஏடிஎம் கார்டு மற்றும் ஒரு சவரன் தங்க நாணயத்தை வைத்திருந்த மஞ்சள் பை மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது. மேலும் அவரது அருகில் அமர்ந்திருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணும் மாயமானது தெரியவந்தது. 

இதையடுத்து, தமிழ்ச்செல்வி குனியமுத்தூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்க நாணயத்துடன் தப்பிச்சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் பேராசிரியையிடம் இருந்து தங்க நாணயம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...