ஊழல் அதிகாரிகளுக்கு பாராட்டு விழாவா? - திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட விவசாயிகள் கைது!

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கனிம வளத்துறையில் பணியாற்றி வரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்துவதாக ஒன்று திரண்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாராட்டு விழா நடத்துவதாக ஒன்று திரண்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் வள்ளல். இவர் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்ற ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் அமைச்சர் தலைமையிலான ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என கூறப்படுகிறது.

மேலும் இவர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை என கடந்த மாவட்ட ஆட்சியராக இருந்த வினீத் அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால் அந்த பணி நீக்கம் செல்லாது என மீண்டும் திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை இணை இயக்குனராக வள்ளலை நியமித்து கனிமவளத்துறை இயக்குனர் ஜெயகாந்தன் நியமனம் செய்தார்.

இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கனிம வளத்துறையில் ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் கனிமவளத்துறை இயக்குனர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்திருந்தது.



அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாராட்டு விழா நடத்துவதற்காக ஒன்று திரண்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். 



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என அவர்களை கலைந்து போகச் சொல்லி காவல்துறையினர் வலியுறுத்திய நிலையில் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய அவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...