துடியலூர் எரியூட்டு மயானத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடவு!

கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள மாநகராட்சி எரியூட்டு மயானம் துவங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அனுசரிக்கும் விதமாக கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் எரியூட்டு மயான வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை: துடியலூர் எரியூட்டு மயானத்தின் 8ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஈஷா அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை துடியலூரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பாக எரியூட்டு மயானம் தொடங்கப்பட்டது. இதனை ஈஷா யோகா மைய அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் எரியூட்டு மயானம் ஆரம்பிக்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பாக எரியூட்டு மயான வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் பணியினை மேற்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார், பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோக்குமார், கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். 

மேலும் இந்நிகழ்ச்சியில் நிர்மல்குமார், சீனிவாசன், மூர்த்தி, வெள்ளியங்கிரி, விஜயகுமார், கார்த்தி, சக்திவேல், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...