வால்பாறையில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


கோவை: வால்பாறையில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற நகர்ப்புற நல்வாழ்வு மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.



மேலும், பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மையங்களையும் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்பொழுது கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி மூலம் வாழைத்தோட்ட பகுதியில் 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மையமும் திறக்கப்பட்டது.

இந்த நகர்ப்புற நலவாழ்வு மையம் பொது மக்களின் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்துமாறு சுகாதாரத்துறை மூலம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.



இந்த நிகழ்வில், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...