கோவை வேளாண் பல்கலையில் பட்டயப்படிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை ‌ சமர்ப்பிப்பற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஜூலை 1 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை ‌ சமர்ப்பிப்பற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தால்‌ வழங்கப்படும்‌ பட்டயப்படிப்புகள்‌.

இந்த கல்வியாண்டில்‌ வேளாண்மை (ஆங்கில வழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும்‌ வேளாண்மை பொறியியல்‌ ஆகிய பட்டயப்படிப்புகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு வருகின்றன.

மாணவர்கள்‌ தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கான கடைசி தேதி 09.06.2023 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இணையதளம்‌ மூலமாக பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்‌ கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்‌ என்ற கோரிக்கை பெற்றோர்‌ மற்றும்‌ பொதுமக்களிடம் இருந்து தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தால்‌ பெறப்பட்டு வருகிறது.

ஆகையினால்‌ வேளாண்மை (ஆங்கிலவழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும்‌ வேளாண்மை பொறியியல்‌ ஆகிய பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக இணையதளம்‌ மூலமாக விண்ணப்பித்தை பதிவேற்றுவதற்கான கடைசி தேதி 01.07.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதார்கள்‌ தங்களின்‌ விண்ணப்பங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சமர்ப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌ . விண்ணப்பதார்கள்‌ www.tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌, கோயமுத்தூர்‌

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 0422-6611345, 0422-6611346, 9488635077, 9486425076 என்ற தொலைபேசி உதவிச்‌ சேவை எண்களிலும்‌ [email protected] என்ற மின்னஞ்சல்‌ மூலமாகவும்‌ வார நாட்களில்‌ காலை 9.00 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அறிந்து கொள்ளலாம்‌.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...