கோவை வேளாண் பல்கலையில் பட்டயப்படிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை ‌ சமர்ப்பிப்பற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஜூலை 1 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை ‌ சமர்ப்பிப்பற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தால்‌ வழங்கப்படும்‌ பட்டயப்படிப்புகள்‌.

இந்த கல்வியாண்டில்‌ வேளாண்மை (ஆங்கில வழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும்‌ வேளாண்மை பொறியியல்‌ ஆகிய பட்டயப்படிப்புகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு வருகின்றன.

மாணவர்கள்‌ தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கான கடைசி தேதி 09.06.2023 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இணையதளம்‌ மூலமாக பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்‌ கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்‌ என்ற கோரிக்கை பெற்றோர்‌ மற்றும்‌ பொதுமக்களிடம் இருந்து தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தால்‌ பெறப்பட்டு வருகிறது.

ஆகையினால்‌ வேளாண்மை (ஆங்கிலவழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும்‌ வேளாண்மை பொறியியல்‌ ஆகிய பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக இணையதளம்‌ மூலமாக விண்ணப்பித்தை பதிவேற்றுவதற்கான கடைசி தேதி 01.07.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதார்கள்‌ தங்களின்‌ விண்ணப்பங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சமர்ப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌ . விண்ணப்பதார்கள்‌ www.tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌, கோயமுத்தூர்‌

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 0422-6611345, 0422-6611346, 9488635077, 9486425076 என்ற தொலைபேசி உதவிச்‌ சேவை எண்களிலும்‌ [email protected] என்ற மின்னஞ்சல்‌ மூலமாகவும்‌ வார நாட்களில்‌ காலை 9.00 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அறிந்து கொள்ளலாம்‌.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...