கோவையில் உள்ள 14 காவல்நிலையங்களுக்கு டேப்களை வழங்கிய காவல் ஆணையர்!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் படி, காவல்நிலையங்களை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்காக கோவையில் உள்ள 14 காவல் நிலையங்களுக்கு தலா 3 என 42 டேப்களை (Tablet PC) கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வழங்கினார்.



கோவை: கோவை மாநகரில் உள்ள 14 காவல் நிலையங்களுக்கு தலா 3 டேப்களை (Tablet PC) மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார். 

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அதிக வழக்குகள் பதிவாகும் காவல் நிலையங்களுக்கு இ-பீட் ரோந்து மற்றும் இதர பணிகளுக்காக டேப் (tab) வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் 14 காவல் நிலைங்களுக்கு தலா 3 டேப்கள் வழங்கப்பட்டுள்ளது. 



இதனை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வழங்கினார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,



தற்போது காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு இந்த டேப்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 3 செயலிகள் உள்ளது, அதன் மூலம் குற்றவாளிகளை கண்காணிக்கவும், சந்தேகப்படும் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காண இவை உதவும்.

வேறு தனிப்பட்ட விஷயங்களுக்கு டேப் (tab) ஐ பயன்படுத்த முடியாது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானாக்கள், u turn கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 



காற்று மாசுவில் இருந்து போக்குவரத்து காவலர்கள் காக்க உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

பள்ளிகள் திறக்கும் நாளில் அனைத்து பள்ளிகள் முன்பும் நோட்டீஸ்கள் வழங்கி பிரச்சனை என்றால் அணுக வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளோம். கல்லூரிகளில் புத்தாக்கம் பயிற்சி நிகழ்ச்சிகளின் போதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

கோவை மாநகரில் கடந்த ஆண்டை விட 10 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளன. சிக்னல் இல்லாமல் ரவுண்டாணாக்கள் மாற்றப்பட்டுள்ளதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்த கும்பலை பிடித்து விட்டோம். புதிய கும்பல்களையும் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...