மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வரும் பல்லடம் நகராட்சி வளாகம்!

பல்லடம் நகராட்சி வளாகத்தின் கழிப்பறை அருகே மதுபாட்டில்கள் வீசப்பட்டு கிடந்த நிலையில், அங்கிருந்த பேனரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தின் மீது மதுபாட்டில்கள் இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர்: பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் மதுபாட்டில்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியின் அலுவலக கட்டிடம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ளது. நகராட்சிக்கு நாள்தோறும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறை அருகே மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வளாகத்தில் உள்ளே மது அருந்துகிறார்களா? அல்லது வெளி ஆட்கள் மது அருந்துகிறார்களா? என்பது புரியாத புதிராக உள்ளது. 



அங்கு வைக்கப்பட்டுள்ள பழைய பேனரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரது புகைப்படத்தின் மீது காலி மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து நகராட்சி ஆணையர் விநாயகம் கூறியதாவது, 

நகராட்சி வளாகத்தில் போடப்பட்டுள்ள மது பாட்டில்களை சுத்தம் செய்து விட்டோம். வளாகத்தில் மது அருந்துவோர் யார் என்பது குறித்து கடந்த 15 நாட்களில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...