துடியலூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா!

துடியலூர் அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனி ஸ்ரீகணபதி நகரிலுள்ள மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் மற்றும் ஆதிசேச நாகராஜர் கோவிலின் 8ம் ஆண்டுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அம்மன் அழைத்தலில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: துடியலூரில் மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனி, ஸ்ரீ கணபதி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் மற்றும் ஆதிசேச நாகராஜர் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலின் 8ம் ஆண்டுத் திருவிழா கடந்த 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 



இதில் நேற்று இரவு அம்மன் அழைத்தல், விகேவி நகர் சுக்காளம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ மதுரை வீரன் குதிரை வாகனத்திலும், சக்திக் கரகம் சாமி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.



இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...