துடியலூரில் கஞ்சா விற்பனை - கேரள மாநில இளைஞர் கைது!

கோவை துடியலூர் பகுதியில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் என்ற இளைஞரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: துடியலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

அதன் அடிப்படையில் நேற்று துடியலூர் சுற்று வட்டாரப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் துடியலூர் சரவணம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சஞ்சய்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர், விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தற்போது தொண்டமுத்தூர் பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. 

மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...