துடியலூரில் கஞ்சா விற்பனை - கேரள மாநில இளைஞர் கைது!

கோவை துடியலூர் பகுதியில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் என்ற இளைஞரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: துடியலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

அதன் அடிப்படையில் நேற்று துடியலூர் சுற்று வட்டாரப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் துடியலூர் சரவணம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சஞ்சய்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர், விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தற்போது தொண்டமுத்தூர் பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. 

மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...