உடுமலையில் மூளை நோயால் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!

உடுமலை பழனி ஆண்டவர் நகரைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான விக்னேஷ் (32) என்பவருக்கு திடீரென மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி ஆண்டவர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (32). இவர் சென்னையில் தங்கியிருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருக்கு மனைவியும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

இதனிடையே விக்னேஷுக்கு திடீரென மூளைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். அவரது உடல் உறுப்புகள் மருத்துவர்கள் மூலமாக தானமாக பெறப்பட்டது. 

உயிரிழந்த விக்னேஷ் கால்பந்தாட்ட வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறந்த பின்பும் உடல் உறுப்புகள் மூலமாக பலருக்கு வாழ்க்கை அளித்த சம்பவம் உடுமலை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...