உடுமலையில் மூளை நோயால் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!

உடுமலை பழனி ஆண்டவர் நகரைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான விக்னேஷ் (32) என்பவருக்கு திடீரென மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி ஆண்டவர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (32). இவர் சென்னையில் தங்கியிருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருக்கு மனைவியும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

இதனிடையே விக்னேஷுக்கு திடீரென மூளைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். அவரது உடல் உறுப்புகள் மருத்துவர்கள் மூலமாக தானமாக பெறப்பட்டது. 

உயிரிழந்த விக்னேஷ் கால்பந்தாட்ட வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறந்த பின்பும் உடல் உறுப்புகள் மூலமாக பலருக்கு வாழ்க்கை அளித்த சம்பவம் உடுமலை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...