துடியலூரில் முறையான குடிநீர் வழங்க கோரிக்கை - ஊராட்சி அலுவலகம் முற்றுகை!

கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராகுல்காந்தி நகர் பொதுமக்கள் குடிநீர் விநியோகிக்க கோரி ஊராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓரிரு நாளில் குடிநீர் விநியோக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.



கோவை: துடியலூர் அடுத்த குருடம்பாளையம் அருகே முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி ஊராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராகுல் காந்தி நகர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று குருடம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



அப்போது ஊராட்சி அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலர் சண்முகம் அப்பகுதியில் கால்வாய் பணி நடைபெற்று வருவதால் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் குடிநீர் விநியோகம் சீராகும் என தெரிவித்ததைத் தொடர்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...