பக்ரீத் பண்டிகைக்காக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் - விஷ்வ இந்து பரிஷத் மனு!

வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையின் பல்வேறு பகுதிகளில் இறைச்சிக்காக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கோவை ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, வரும் ஜூன் 29ஆம் தேதி பகரீந்-ஐ முன்னிட்டு கோவையின் செல்வபுரம், உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இறைச்சிக்கான மாடுகள் பொது இடங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளன, 

கடந்த வருடங்களில் இது போலவே அரசு அனுமதி பெற்ற இறைச்சி கூடங்களை தவிர்த்து பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது. அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கால்நடை மருத்துவரின் சான்றிதழ், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி கூடங்கள் மட்டும் பபன்படுத்துவது போன்ற விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து மாடுகள் வெட்ப்படுவதாக அறிகிறோம். 

எனவே இதுபோன்ற நிகழ்வுகள் இந்த வருடம் நடைபெறாமல் முன் கூட்டியே அரசும், காவல்துறையும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...