ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த வாகனம் வாடகைக்கு விடப்படுகிறது - ஆல்ட்ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மனு

தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை தனி நபருக்கு வாடகைக்கு விடப்படுவதால் பல குற்ற சம்பவங்கள் நடப்பதோடு வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆல்ட்ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.



திருப்பூர்: சொந்த வாகனம் வாடகைக்கு விடப்படுவதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி ஆல்ட்ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆல்ட்ராக் ஓட்டுநர் உரிமையாளர் நலச் சங்கத்தின் சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் இந்த போக்கு அதிக அளவில் உள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை தனி நபருக்கு வாடகைக்கு கொடுப்பதன் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை.

இதனால் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அவ்வாறு இல்லாவிட்டால், வாடகை வாகனங்களாக பதிவு செய்யப்பட்டதை சொந்த வாகனங்களாக மாற்றி கொடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...