சூலூரில் தனது சொத்தை தந்தையிடம் இருந்து மீட்டுத்தர கோரி 13வது நாளாக 50 வயது பெண் உண்ணாவிரதம்!

கோவை மாவட்டம் சூலூரில் சுமதி என்பவர் 28 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலத்தை அவரது தந்தை பழனிசாமி, வேறொருவருக்கு விற்பனை செய்த நிலையில், தனக்கு சேர வேண்டிய சொத்துகளை தந்தையிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி சுமதி (50) 13வது நாளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.



கோவை: தனக்கு சேர வேண்டிய சொத்துகளை தந்தையிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி 50 வயது பெண் ஒருவர் 13வது நாளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 



கோவை மாவட்டம் சூலூரில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மனைவி சுமதி. இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு சுமதியின் தந்தை பழனிச்சாமி, சுமதிக்கு சூலூரில் 3.80 ஏக்கர் நிலத்தினை பயன்படுத்தி கொள்ளுமாறு கொடுத்துள்ளார்.

28 ஆண்டுகளாக சுமதி அந்த நிலத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திடீரென சுமதியின் அனுபவத்தில் உள்ள அந்த நிலத்தை அவரது தந்தை பழனிச்சாமி, திருப்பூரை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். 

நிலத்தை வாங்கிய ராமசாமி என்பவர் சுமதியை நிலத்தை காலி செய்யுமாறு வற்புறுத்தி உள்ளார். தான் வாங்கிய நிலத்தை சுமதி குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதை மீட்டுத் தருமாறு ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சுமதியின் அனுபவத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்தது செல்லாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவை மீறி சுமதியின் நிலத்தை வாங்கிய ராமசாமி கோவையைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். 28 ஆண்டுகளாக தனது அனுபவத்தில் உள்ள நிலத்தை நம்பி தான் தனது வாழ்வாதாரம் உள்ளதாகவும் தனக்கு சேர வேண்டிய சொத்தினை தனது தந்தை தர மறுப்பதாகவும் கூறி கடந்த 13 நாட்களாக சுமதி தனது சொந்த நிலத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுமதியிடம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தனக்கு சேர வேண்டிய சொத்தினை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.



குடும்ப பிரச்சனையை அடியாட்களை வைத்து பொது பிரச்சினையாக சிலர் மாற்றுகிறார்கள் எனவும் விவசாயி சுமதியின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினரும், கள் இயக்க கூட்டமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...