ரூட்ஸ் குழுமங்களின் சார்பில் "46-வது தேசிய பாதுகாப்பு தின விழா" சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோவையில் செயல்பட்டு வரும் ரூட்ஸ் குழும நிறுவனங்களில் "46-வது தேசிய பாதுகாப்பு தின விழா" இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது அனைத்து நிறுவனங்களிலும், பணியாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கலாச்சாரத்தை மேம்படுத்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக ரூட்ஸ் கம்பெனி வளாகத்தினுள் பாதுகாப்பு வாசகங்களின் பேனர்கள் அனைத்து பணியாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து, பணியாளர்கள் தங்களது பணிகளை துவங்குவதற்கு முன்பு ஒன்றுகூடி பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.

இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு தினம் குறித்த சிறப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை உற்பத்தி திறன் குழு அரங்கில் நடைபெற்றது.



இதன் துவக்க விழாவில் ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் பங்கேற்று பாதுகாப்பு குறித்த கருத்துரை வழங்கினார்.



தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை கூடுதல் இயக்குநர் கே.அருள், விழாவினைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

விழாவில், சரகம் ஒன்று மற்றும் இரண்டின் தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இணை இயக்குநர்கள் பி.என்.சங்கர் மற்றும் எம்.வி.செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனைத்தொடர்ந்து, ரூட்ஸ் காஸ்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஓ.ஏ.பாலசுப்ரமணியம் விழாவில் பங்கேற்று பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து, தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் சபீனா மற்றும் வந்தே மாதரம் ஏ.மாதவன் ஆகியோர் பங்கேற்று "தொழில்சாலையில் பாதுகாப்பு" என்ற தலைப்பில் பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சியினை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "தொழிற்சாலையில் பாதுகாப்பிற்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது" என்ற தலைப்பில் பணியிடச் சூழலே, பாதுகாப்பான செயல்பாடுகளே என்ற இருவேறு கருத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.



இதில், பணியிடச் சூழலே என்ற கருத்தை முன்வைத்து ஆர்.ராஜ்குமார், ஆர்.சுகுமார், எம்.பாரதிராஜா ஆகியோரும், பாதுகாப்பான செயல்பாடுகளே என்ற கருத்தை முன்வைத்து எஸ்.டி.செந்தில்குமார், என்.செந்தில்ராஜா, ஆர்.சதீஸ் ஆகியோரும் பேசினர். இப்பட்டிமன்றத்தில் எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிட்., மற்றும் கோவை உபமண்டலம், தேசிய பாதுகாப்பு குழுமம் உறுப்பினர் துணை மேலாளர் (பாதுகாப்பு) சி.ராஜேஷ்வரன் நடுவராக செயல்பட்டார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...