பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வேறு இடங்களில் தூய்மை பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.


Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் பல்வேறு பொதுப்பணிகள் மற்றும் தூய்மை பணிகளை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பீளமேடு கிரி அம்மன் கோயில் வீதி பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகும் பிரச்சனை எழுந்திருந்தது. இதை சரி செய்யும் பணி இன்று நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பணி நடப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியை முடித்த பிறகு காங்கிரீட் தளம் அமைக்குமாறும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணியை விரைந்து முடித்திடவும் சூயஸ் சூப்பர்வைசரிடம் கூறினார்.



பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை தபால் நிலையம் முன்பகுதியில் மாஸ் கிளீனிங் பணி இன்று நடைபெற்றது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோரத்தில் குப்பைகள், மண்கள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் வலியுறுத்தினார். இதில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.

பீளமேடு பிஆர்பி கார்டன் பகுதியில் தினசரி குப்பை வாங்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்பதை கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அறிவுறுத்தினார்.



பீளமேடு சூர்யா கார்டன் பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் சுத்தம் செய்யும் பணியும் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் தினசரி சரியாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் வலியுறுத்தினார்.

வார்டு எண் 27 பீளமேடு பகுதி மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க கவுன்சிலர் அம்பிகா தனபால் தொடர்ந்து களத்தில் இறங்கி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...