பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்!

பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு போக்குவரத்து போலீஸாரை நியமித்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 26 ஆவது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.



கோவை: பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டுமென கவுன்சிலர் சித்ரா மனு அளித்துள்ளார்.

கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) மதிவாணனிடம், மாநகராட்சி 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

பீளமேடு ரயில்வே மேம்பாலத்தை சுற்றி எல்லைத் தோட்டம், முருகன் நகர், ஹட்கோ காலனி, காந்திமாநகர், வி.கே.ரோடு, கருப்பண்ண கவுண்டர் லே அவுட் உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. 

இந்த ரயில்வே மேம்பாலம் வழியாக இப்பகுதி மக்கள் மற்றும் அலுவலகங்கள். கல்லூரிகள், பள்ளிகள் என அன்றாட பணிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்த பாலத்தில் லாரிகள், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி காலை 7 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் செல்கின்றன. 

இதனால் ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...