கோவை பி.கே.புதூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு!

குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் செயினை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்


கோவை: குனியமுத்தூர் அருகேயுள்ள பி.கே.புதூர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த பி.கே புதூர் ஸ்ரீநகர் காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன், இவரது மனைவி பிரேமா கடந்த ஜூலை 4ஆம் தேதி தனது வீட்டின் அருகேயுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது குளத்துப்பாளையம் சாலை பாலு கார்டன் அருகே வந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென பிரேமா கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறிக்க முயன்றார்.

அப்போது பிரேமா செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் அரை சவரன் எடை கொண்ட செயினில் ஒரு பகுதியை பிடுங்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து பிரேமா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...