கோவை போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் ஆய்வு!

கோவை மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சீரான போக்குவரத்துக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.


கோவை: கோவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



அவருடன் மாநகர காவல் ஆணையாளர் போக்குவரத்து மதிவாணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் மற்றும் காவல் துறையினர் சென்றனர்.



அப்போது திருச்சி சாலை சுங்கம், சுங்கம் மேம்பாலம், சிங்காநல்லூர், அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் சந்திப்பு, காந்திபுரம் பேருந்து நிலையம் சந்திப்பு, பார்க் கேட் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.



பின்னர், போக்குவரத்து சீராக செல்வதற்கும், சிக்னல்கள் பணிகள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் கேட்டறிந்து சீரான போக்குவரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...