உடுமலையில் அறநிலையத்துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உடுமலையில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. 6 ஜோடிகளுக்கும் தலா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.



உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோவில்கள் வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட ஆறு ஜோடிகளுக்கு, இலவச திருமணம், அமைச்சர் கயல்விழி முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், ஆறு ஜோடிகளுக்கும், தலா 4 கிராம் தங்கம், மணமகன், மணமகள் ஆடை, கட்டில், பீரோ, மெத்தை, பொருட்கள், பாத்திரங்கள் என திருமண சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

அறநிலையத்துறை இணை ஆணையர் குமர துரை, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில், கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...