உடுமலை கல்குவாரிகளில் விதி மீறல்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு!

திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், உடுமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள கல்குவாரிகளில் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், திண்டுக்கல், உடுமலை, மடத்துக்குளம், பழனி தாலுகாவிலுள்ள குவாரிகளிலிருந்து, கேரளாவுக்கு, தினமும், 200 லோடு, ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, கனிமங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று முன்தினம், கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு சென்ற, 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சச்சின் ஆனந்த் தலைமையில் உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், அனுமதிக்கப் பட்ட அளவை விட, கூடுதலாக, கனிம வளங்கள் ஏற்றியதாக, 9 லாரிகளுக்கும், ரூ.5.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கனிம வளத்துறை உதவி இயக்குனர் சச்சின் ஆனந்த் கூறியதாவது,

சட்டவிரோத கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்து, திண்டுக்கல் மாவட்ட கனிம வளத்துறைக்கு தகவல் கொடுத்து, குவாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக உள்ள கனிம வளங்கள் பறிமுதல் செய்து, உரிய ஆய்வு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...